மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்ட உள்ளூர் கலப்பின சோளம் விதைகள் மண்டூர் விவசாய போதனாசிரியர்
பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை கிராமத்தில் நடுகை செய்யப்பட்டது.
இதன் வெற்றிகரமான அறுவடை விழா, தொழில்நுட்ப உத்தியோகத்தர் குலசிங்கம் கிலசன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா கலந்து கொண்டார்.
கலப்பின சோளம் விதைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடுகை செய்து, உள்ளூர் கலப்பின சோளம் விதைகளின் உற்பத்தியை
ஊக்குவிக்கும் முகமாக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
சோளம் விதை அறுவடை விழா நிகழ்வில், தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், மண்டூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்
கே.ஜெயகாந்தன் , பாடவிதான உத்தியோகத்தர் லக்ஸ்மன், விவசாய போதனாசிரியர் கோபி , விவசாயிகள் கலந்து கொண்டனர்.