வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மக்கள் பிரகடன போராட்டம்!



அரசியல் தீர்விற்கான 100 நாள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மக்கள் பிரகடன போராட்டம் நேற்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யுமாறு,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மக்கள் பிரகடன போராட்டம் மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது மக்கள் பிரகடனம் எனும் 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கையேடும் வழங்கப்பட்டது.


புதியது பழையவை