கொழும்பில் இடம்பெற்ற 2020-2021 ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்வாபிமானி விருது வழங்கல் நிகழ்வில் மட்டக்களப்பை சேர்ந்த திருமலை M.சுகந்தினி முதலாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
இந்த நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேற்று (03-08-2023) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது 2023 ஆம் ஆண்டு முதலாவது இடத்தை, மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தின் தொழிற் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருமலை M.சுகந்தினி என்பவர் பெற்றுள்ளார்.