இலங்கையின் மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் முகநூல் பக்கம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தை அடையாளம் தெரியாதோர் முடக்கியுள்ளதாக முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில் முகநூல் பக்கத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.