திருகோணமலை, சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (07-08-2023) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.