இன்றைய தினம் பௌர்ணமி விடுமுறை - மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும்



இன்றைய தினம் பௌர்ணமி விடுமுறை தினம் என்றபோதிலும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01- 08-2023) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.


அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே இந்த கிளைகள் நாளையதினம் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை