பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 40 கைதிகளுக்கு விடுதலை



ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (13.09.2023) தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் மூவர் கைது
மட்டக்களப்பில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் மூவர் கைது

சிறு குற்றம் புரிந்த கைதிகள்
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மெக்சிக்கோவில் காட்சிப்படுத்தப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்கள்
மெக்சிக்கோவில் காட்சிப்படுத்தப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்கள்


மேலும் இந்த நிகழ்வு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை