துப்பாக்கிச்சூட்டில் சிறுமி உயிரிழப்பு - தந்தை காயம்!



மாளிகாகந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

மாளிகாகந்தையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதியது பழையவை