கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் வழியில், 40வட்டை சந்தியில் ஸ்தாபிக்கப்பட்ட 35 அடி உயராமான பாலமுருகன் சிலைக்கு
இன்று (29-10-2023)குடமுழுக்கு இடம்பெற்றது.
முருகன் புலனம் குழுவின் ஏற்பாட்டில் சுமார் 35 அடி உயரமான சிலை ஸ்தாபிக்கப்பட்டது.
தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் குடமுழுக்கு வெகுவிமர்சையாக
நடைபெற்றது.
விசேட யாகபூஜை,கும்பபூஜை நடைபெற்றதை தொடர்ந்து முச்சந்தி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பாலமுருகனுக்கு விசேட பூஜைகள் அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹா குடமுழுக்கு இடம்பெற்றது.
குடமுழுக்கு பெருவிழாவில் நீர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை