மட்டக்களப்பு ஏறாவூர், மிச்நகர் பிரதான வீதி புகையிரதக் கடவையில் இன்று (03-10-2023) முற்பகல் வேளையில் மட்டக்களப்பிலிருந்து மாகோ நோக்கிப்பயணித்த புகையிரத்தில் முச்சக்கர வண்டி மோதுண்டு ஏறாவூர், மீராகேணியை வதிவிடமாகக் கொண்ட 38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார்.
இக்கடவை பல மாதங்களாக பாதுகாப்பற்றதாகக் காணப்படும் நிலையில், இவ் துயர சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
இவருடைய மரணம் போன்று மற்றுமொரு உயிர் போய் விடக்கூடாது என்ற அடிப்படையில் பிரதேச மக்களால் "பாதுகாப்பான புகையிரதக்கடவை வேண்டும்" உரிய அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரி ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.