இன்றைய வானிலை முன்னறிவிப்பு



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேல், தென் மற்றும் வட  மாகாணங்களிலும்  அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும்  காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில்


நாட்டை சூழ உள்ள கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹமபாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்தும் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருந்தும்  நாட்டை சூழ உள்ள ஏனைய கடல்  பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும்  காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

 கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
 சிரேஸ்ட  வானிலை அதிகாரி
புதியது பழையவை