இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!



நாட்டிற்கு கடந்த மாதம் 31 ஆம் திகதி வரை 11 இலட்சத்து 25 ஆயிரத்து 455 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

அதில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஜூலை மாதத்திலேயே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி, அந்த மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 39 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
புதியது பழையவை