நுவரெலியா பிரதேசத்தில் வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (2023.11.09) இசை வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரமின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேக நபர்கள் இன்று வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.