சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு



வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிரீட்டில் ஆன நீர்க்குழாய் தொகுதி வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் வெல்லம்பிட்டிய வேரகொட கனிஸ்ர வித்தியாலயத்தில் இன்று (15-11-2023)காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


காயமடைந்த ஐந்து மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




புதியது பழையவை