ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் இன்று முதல் ஆரம்பம்



ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்று (05-12-2023) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி 1,406,932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப்படுவோருக்கு அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை