மிக்ஜாம் சூறாவளி யாழ்ப்பாணத்திற்கு அருகில்!



மிக்ஜாம் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று காலை வெளியிடப்பட்ட சிவப்பு அறிவித்தல் மூலம் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை