மட்டக்களப்பு இருதயபுரத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 13 நாள் குழந்தை உயிரிழப்பு!




மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி 13 நாள் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் (22-01-2024)ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு சம்பவ தினமான நேற்றுமுன்தினம் மாலை,

தாயார் தாய்ப்பால் வழங்கிய நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாணையின் போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து.


அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகாக ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சடலம் நேற்று (23-01-2024) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை