மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை - 37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!




மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி 152 தமிழ்மக்களை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28-01-2024) அனுஷ்டிக்கப்பட்டது.

மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.


சுட்டுக் கொன்ற சிறிலங்கா இராணுவத்தினர்
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.


இந்த நிலையில் 37 ஆவது நினைவு தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லாவெளி அமைப்பாளர் குமாரசிங்கம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய நினைவு தூபியில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

புதியது பழையவை