தமிழரசுக் கட்சியின் உச்சக்கட்ட ஜனநாயகம்!!






தமிழரசுக் கட்சியில் பொதுச் செயலாளர் தெரிவின் போது பொதுக்குழுவிடம் கைகளைத் தூக்கி வாக்களிக்கும்படி சுமந்திரன் கோரிக்கை விட்டதும், உறுப்பினர்கள் தமது கரங்களை உயர்த்தி அளித்த வாக்குகளின் அடிப்படையில் குகதாசன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்ததே.

இந்த விடயம் பற்றி கட்சியின் தலைவரிடம் சில கேள்விகளை ஒரு ஊடகமாக எழுப்ப விரும்புகின்றோம்

பொதுச்சபை முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 இற்கும் அதிகமானவர்கள் வெளியேறிய பின்னர்தான் கைதூக்கி வாக்களிப்பதற்கான கோரிக்கையை சுமந்திரன் விடுத்திருந்தார் என்று கூறப்படுகின்றதே.. இது உண்மையா?

கைதூக்கி வாக்களிக்கும் முறையை சுமந்திரன் கோரியதில் கட்சியின் தலைவராக நீங்கள் உடன்பட்டீர்களா?

கைதூக்கி அளிக்கப்பட்ட வாக்குக்கள்தான் எண்ணப்பட்டன என்பது உண்மையானால், யார் அதனை எண்ணியது?

குகதாசன் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றோ அல்லது அவர் வரக்கூடாது என்றோ வாக்களித்த பொதுச்சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டனவா?

பொதுச்செயலாளர் தெரிவின் போது கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் அல்லாதவர்கள் வாக்களித்தார்கள் என்பது உண்மையா?

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் பிரமுகர் ஒருவர் தனது இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்தார் என்று கூறப்படுகின்றதே அது உண்மையா?

அவரது வாக்குகள் இரண்டாகக் கணக்கு வைக்கப்பட்டதா அல்லது ஒரு வாக்குத்தான் கணக்கில் எடுக்கப்பட்டதா?

அப்படி அவரது வாக்கை கணக்கில் எடுத்தவர் யார்?

மேலே உள்ள புகைப்படத்தில் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்த உங்கள் கட்சி உறுப்பினரின் செயல் சரியானதா?

பிழை என்றால் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படுமா?

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்ததாகக் கூறப்படுகின்றதே உண்மையா?

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு நியாயமாக நடந்தது என்று உறுதியாக நம்புகின்றீர்களா?

இல்லை என்றால் அடுத்து என்னசெய்யப்போகின்றீர்கள்?


புதியது பழையவை