சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்




பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த பின்னணியில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை