மட்டக்களப்பில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சடலமாக மீட்பு!



மட்டக்களப்பு வாழைச்சேனை - நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12-01-2024) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை (13-01-2024) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.


நேற்று (12-01-2024) கல்குடா சுழியோடிகள் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை