மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளியில் வாகனங்களை நிறுத்தி பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களை தேடி நேற்று (06-01-2024) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 2186 தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை கடத்திச் சென்ற 7 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இந்த சோதனை நடவடிக்கையின் போது பேருந்துகளில் இருந்த அனைத்து பயணிகளையும் இறக்கி அவர்களையும், அவர்களது உடமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.