மட்டக்களப்பு தேத்தாதீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் புதிரெடுக்கும் நிகழ்வு!




மட்டக்களப்பு மாவட்டம் தேத்தாதீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இன்றய (25-01-2024)தினம்
புதிரெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் த.விமலானந்தராசா தலைமையில் புதிரெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கொம்புச் சந்திப் பிள்ளையாருக்கு பூஜைவழிபாடுகள் இடம்பெற்று, பின்னர் தேத்தாதீவு வயற்கண்டத்தில் பாரம்பரிய முறைப்படி அரிவாள் கொண்டு நெல் அறுவடை செய்து
பின்னர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆலய முன்றலில் வைத்து அறுவடைப் பாடல் பாடி உப்பட்டி அடித்து பின்னர் நெல் குற்றி ஆலயத்தில் சுவாமிக்கு நைவேத்திங்கள்
செய்து வழிபாடுகள் இடம்பெற்றன.
வயலிலே அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆலய பிரதமகுரு பொது மக்களுக்கு வழங்கினார்.
தைப் பூச நாளை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றதோடு, சிறார்களின் நெல்அறுவடை வசந்தன் கூத்தும்
இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் பூஜைகளை நெறிப்படுத்தினார்.


புதியது பழையவை