நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு!





நாடு முழுவதிலும் சீரான வானிலை காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும்.

நாட்டின் அனேகமான மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலையே நிலவக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில்  இருந்து  காற்று வீசும். 

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் ஹமபாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை