இலங்கை காவல்துறைக்கு உதவ முன்வந்துள்ள- கனடா தமிழ் காவல்துறை அதிகாரி



கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் இலங்கைத் தமிழரான நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இலங்கை காவல்துறைக்கு உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கை காவல்துறையினர் விசேட அணிவகுப்பு மரியாதை
இவர் தனது விஜயத்தின்போது, பதில் காவல் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.


நிசான் துரையப்பாவிற்கு இலங்கை காவல்துறையினர் விசேட அணிவகுப்பு மரியாதை ஒன்றை நடத்தி வரவேற்றுள்ளனர்.


இலங்கையின் அபிவிருத்திக்கு கனடிய மக்களின் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்கப் போவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயராக இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் புதல்வரே இந்த நிசான் துரையப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை