மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று(16-01-2024) சற்றுமுன் முச்சக்கரவண்டி ஒன்றும் DSI ரயர் நிறுவனத்தின் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பாரிய விபத்து ஏற்பட்டன


சம்பவம் தொடர்பில்



மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி வழியே களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த DSI ரயர் கம்பனிக்கு சொந்தமான லொறியும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வளைவில் நேருக்கு நேர் மோதியுள்ளது இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை