மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!




போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பின் போது, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில், கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 85 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான தலைமையில், விசேட சுற்றிவளைப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை