மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நீதிமன்றம் அமைப்பதற்கு நீதி அமைச்சர் அனுமதி!




மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மட்டக்களப்பு மாவட்டத்தின் நீதித்துறை சார்ந்து பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயங்களை மேற்கொண்டிந்தார்.

அந்த வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது நீதி அமைச்சர் யுத்த காலத்திற்கு முன்னர் கொக்கட்டிச்சோலை"கிராமக்கோடு" இயங்கி வந்த இடத்தில் புதிய சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதோடு, அவற்றுக்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

குறித்த கள விஜயத்தின் போது நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின,இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், கட்சியின் இளைஞரணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஸ்குமார் உட்பட துறைசார் அதிகாரிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



புதியது பழையவை