நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு!





நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலை நாட்டின் கிழக்குப் சரிவு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை