இயந்திரம் இன்றி உடைந்த நிலையில் படகு மீட்பு!





இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று இன்று (11-02-2024) மீட்கப்பட்டு அம்பாறை சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.

இவ்வாறு உடைந்து குறித்த கடற் பகுதியில் காணப்பட்ட எஞ்சிய படகு பகுதிகள் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுத்து வரப்பட்டன.

குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் குறித்த படகு உடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதை இனங் கண்டு  ஏனையோருக்கு   தகவல் வழங்கியதை  அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற  பொதுமக்கள்  மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.

மேலும் உடைந்த   படகு  கல்முனை பகுதியை நேர்ந்த மீனவர் ஒருவருடையது என அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

எனினும் குறித்த படகை  கரைக்கு இழுத்து வரும் போது மீனவர்களோ எந்தவித கடற்சாதனங்களோ இருக்கவில்லை என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன் படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்கு துறையின்றி சிரமங்களை மீனவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை