திருகோணமலையில் வாள் வெட்டு -இளைஞரொருவர் படுகாயம்


திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது வால் வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. 

இச்சம்பவம் நேற்று (24-03-2024) இடம் பெற்றுள்ளது.  நண்பர்களுடன் பாட்டி ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு வந்து தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரினால் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.  இதனையடுத்து உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும்

இதனையடுத்து 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.  இவ்வாள் வெட்டு தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) இளைஞர் காயம் அடைந்துள்ளார்.  தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை