வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் கைது-பொலிஸாரின் அட்டூழியம்




வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மதிமுகராசாவை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த வேளையிலேயே பூசகர் மதிமுகராசா நேற்றைய தினம் (07-03-2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



மேலும் சிவராத்திரி விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன

ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை