யாழில் கோர விபத்து - வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள்




யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து இன்று (22-03-2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

வீதிப் போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்த நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தடம்புரண்ட எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை