இன்றைய வானிலை முன்னறிவிப்பு



சப்ரகமுவ, மேல்,வடமேல்  மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம்,வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை   மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்  காணப்படுகின்றது.  

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  வறட்சியான  வானிலை நிலவக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 - 30 km வேகத்தில் கிழக்குத்திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட  வானிலை அதிகாரி
புதியது பழையவை