அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்



கணபதிப்பிள்ளை அன்னை பூபதியின் 36 ஆவது நினைவுநாள் நிகழ்வானது நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சியிலும் திருகோணமலையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளானவை இன்று(19-04-2024) இடம்பெற்றுள்ளது.



கிளிநொச்சியில் நினைவேந்தல்
கிளிநொச்சியில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது சேவை சந்தை முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார்.


அத்தோடு கிளிநொச்சியில் இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்துகொண்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 
நினைவேந்தல்
திருகோணமலையில் அன்னை பூபதியின் நினைவேந்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலில் மாவட்டத் தலைவர் சண்முகம் குகதாசனும் கலந்துகொண்டார்.


இதனுடன் திருகோணமலையில் இடம்பெற்ற நினைவேந்தலில் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


மட்டக்களப்பு நகரின் மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் முன்பாக 1988 மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்ணை பூபதி அம்மா 1988 ஏப்ரல் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

மேலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி செயற்பாட்டாளராக அன்னை பூபதி அம்மா செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை