உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - நீதி கோரி கல்முனையில் போராட்டம்!



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் எனவே உடனடியாக விசாரணை மேற்கொண்டு நீதியினை வழங்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.


கல்முனை இருதயநாதர் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று ஆராதனை இடம்பெற்ற பின்னர் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டமானது அருட்தந்தை கிருபைராஜா தலைமையில் இடம்பெற்றதுடன் எதிர்ப்பு கோஷங்களை மக்கள் எழுப்பியிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருபலிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை