மட்டக்களப்பு மாவடியோடை ஆற்றில் மூழ்கி, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு
பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பண்ணையொன்றில் தங்கியிருந்துவேலை செய்யும், ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே
உயிரிழந்தாக பொலிஸார் குறிப்பிட்;டனர்.
பண்ணைக்கு அருகேயுள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோதே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டபோது, திடீர் மரண விசாரணைகளை, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் முன்னெடுத்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தகது.