இளம் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்த வைத்தியர் -இரகசியமாக எட்டி பார்த்த நபர்




திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போது உதவி தாதிய பொறுப்பாளர் இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் பொதுவாக நோயாளி ஒருவரை வைத்தியர்கள் உடல் பரிசோதனை செய்யும் வேளையில் அவர்களது சுய உரிமையை பேணும் வகையில் உறவினர்கள் யாரையும் அருகில் அனுமதிப்பதில்லை.



இவ்வாறான சூழ்நிலையில், பெண் நோயாளி ஒருவரை பெண் வைத்திய நிபுணர் ஒருவர் உடல் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த நபரை உடனடியாக வெளியேமாறு வைத்திய நிபுணர் கூறியும் வெளியே செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்ததால் சிறிது நேரம் விடுதிக்குள் குழப்ப நிலை நிலவியதாக தெரிய வருகின்றது.


இதன் காரணமாக இவரது மனநிலை மற்றும் கீழ்தரமான சிந்தனைகளை உணர்ந்த பலர் இவன் மீது ஏன் காலை வைக்க என்று விலகி செல்வதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, பெறுமதியான பல சத்திர சிகிச்சை உபகாரணங்கள் களவு போனமை, குப்பைக்குள் ஏறியப்பட்டமை தொடர்பாக குறித்த நபருக்கு தொடர்புகள் உள்ளதாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
புதியது பழையவை