மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!




எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (15-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலன, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிமலே, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை