நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை



அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளைய தினம்(10-04-2024) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள் 
சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.


இதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மேலும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதியது பழையவை