யாழில் - ஐயாத்துரை நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்



மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின்  20ஆவது நினைவேந்தல் யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு, இன்று (31-05-2024) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, அகவணக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

நடேசனின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மூத்த ஊடகவியாளர் சி.தில்லைநாதன் ஏற்றிவைக்க மலர் மாலையினை ஊடக இல்லத்தலைவர் மகாலிங்கம் அணிவித்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து, வடமராட்சி ஊடக இல்லத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
புதியது பழையவை