மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு!




வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் மரணமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று (06-05-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.

மாமன் மீது மருமகன் கோடரியால் தாக்குதல்

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் அங்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



காவல்துறையினர் விசாரணை

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை மோகன் என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை