பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மாத்தளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது கவரக்குளம் பிரதேசத்தில் வைத்து பாரிய மரமொன்று ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.