பிரான்ஸ் நாட்டில் கணவர் யாழ் தாவடியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!



யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (16-05-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர்.

உடற்கூற்று பரிசோதனை

காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த 31 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இவர் இரவு (15) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மரண விசாரணை 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இருப்பினும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை