கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மட்டக்களப்பு பகுதியில் கோர விபத்து!




கல்முனையிலிருந்து கொழும்பு  நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


பொலிஸ் விசாரணை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது.




சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை