மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களுடைய வீட்டிற்குச் சென்ற பெரிய நீலாவணை பொலிஸார் அச்சுறுத்தல்


இன்று (15.05.2024)  காலை 07.30 மணியளவில் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களுடைய வீட்டிற்குச் சென்ற பெரிய நீலாவணை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீஸ் குழுவினர் போலீஸ் வாகனத்தில் வருகை தந்து முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது என்றும் அது பயங்கரவாதிகளுக்கான நினைவு நாள் என்றும் கூறியதோடு அவ்வாறு மீறி செய்தால் அவரை கைது செய்வதாகவும் இது நீதிமன்ற கட்டளை எனவும் கூறி ஒரு நீதிமன்ற கட்டளையையும் வழங்கியிருந்ததோடு பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலயத்தை சூழவும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பொலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அந்த நீதிமன்ற கட்டளையிலே மிகவும் தவறாக முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது தமது பசியை ஆற்றியதோடு மக்களின் உயிர்காத்த கஞ்சியை அந்த நாட்களின் நினைவாகவும் அங்கு உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வாகவும் நாம் அனுஷ்டிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினங்கள் அல்லது நினைவு வாரத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையிலே அது பயங்கரவாதிகளை நினைவு கூருகின்ற தினம் என அதிலே குறிப்பிடப்பட்டிருப்பதோடு நீதிவான் நீதிமன்றம் கல்முனை என்று ஒருவருடைய கையெழுத்தும் அதில் இருக்கிறது ஆனால் எந்த நீதிமன்றத்திற்குமான இறப்பர் முத்திரை அதிலே இல்லை என்பதையும் அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதோடு இந்த தடையுத்தரவிலே
தாமோதரம் பிரதீவன்
புஷ்பராஜ் துஷானந்தன்
விநாயகம் விமலநாதன்
தம்பிராசா செல்வராணி
கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோருக்குமாக இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.
,
நேற்றைய தினமும் இவ்வாறு ஒரு சம்பவம் இங்கு நடைபெற்றிருந்ததையும் நினைவுபடுத்துவதோடு அதில் அம்பாரை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்ப சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியை கைதுசெய்ய முயற்சித்திருந்ததோடு சமூக செயற்பாட்டாளர் பு.துஷாநந்தனுக்கு நீதிமன்ற தடையுத்தரவும் வழங்கப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து இவர்களுடன் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனும் இணைந்து கல்முனை மனித உரிமையத்திற்குச் சென்று முறைப்பாடுகளையும் கையளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோன்று இன்றைய தினமும் நடைபெற்றிருக்கிறது
இது தொடர்பிலே இன்றைய தினமும் அவர்கள் மனித உரிமையகத்தை நீதிக்காக நாடியிருக்கிறார்கள்.
புதியது பழையவை