அம்பாறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!




அம்பாறை - கல்லோயா பாலத்திற்கு அருகில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பாடசாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை