மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை



வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ், மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்தும் 7 கைதிகள் இன்றைய தினம் விடுதவை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் முன்னிலையில், சிறு குற்றங்களுக்காக சிறைந்தண்டனை அனுபவித்து வந்த கைதிகளில், நன்னடத்தையை வெளிப்படுத்திய 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


மட்டக்களப்பு சிறைச்சாலை பதில் பிரதான ஜெயிலர் பானுக்க தயான் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை