தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு மறு அறிவித்தல்வரை ஒத்திவைப்பு!




இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி  நடைபெறயிருந்த இவ்வாய்வரங்கு மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குறித்த சர்வதேச ஆய்வரங்கை திட்டமிட்ட திகதியன்று நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், இவ்வாய்வரங்கு நடைபெறும் என்றும் அதற்கான திகதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் சர்வதேச ஆய்வரங்கு குழு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை