ஜனாதிபதி ரணிலின் பொசன் வாழ்த்து செய்தி!



மகிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பொசன் பௌர்ணமி தினத்தை வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

“மகிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

உங்கள் அனைவருக்கும் புண்ணியம் நிறைந்து பொசன் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை